சப்ரகமுவ மாகாணத்தில் ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
தெரணியாகல ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதற்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நேற்று முன்தினம் நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 218 வைத்தியர்களுக்கான வெற்றிடங்களும் மற்றும் 332 தாதியர்களுக்கான வெற்றிடங்களும் நிலவி வருகின்றது.
சப்ரகமுவ மாகாணத்தில் தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
மருத்துவ சேவையில் இருந்து ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் தற்காலிகமாக சப்ரகமுவ மாகாணத்திற்கு சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
அத்தோடு வைத்தியத்துறையில் ஓய்வுபெற்ற இராணுவ வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ தாதியர்களையும் சப்ரகமுவ மாகாண வைத்தியசாலைகளுக்கு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.
(காவத்தை விசேட நிருபர்)
No comments:
Post a Comment