மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வசதிகள் : வீட்டில் இருந்தவாறு முறையிடும் வகையில் வசதிகள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வசதிகள் : வீட்டில் இருந்தவாறு முறையிடும் வகையில் வசதிகள்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களின் நலன்கருதி முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும், சேவையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒன்லைன் (online) வசதிகளை ஏற்படுத்தியுள்ளன.

இதன்மூலம் மின்சார பாவனையாளர்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்துக்கு நேரடியாக வருகைதர வேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறு ஆணைக்குழுவை இலகுவாக தொடர்புகொள்ளலாம் என்பது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று இன்று ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாவனையாளர்கள் மற்றும் பிற சேவை பயனாளர்களை ஒன்லைன் (இணைய சேவை) மூலமாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குச் செல்லாமல் தங்கள் முறைப்பாடுகளை தீர்க்க மின்சார பாவனையாளர்களுக்கு ஒன்லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார பாவனையாளர்களின் தீர்க்கப்படாத முறைப்பாடுகளை பின்வரும் வழிகளில் ஆணைகுழுவிற்கு சமர்ப்பிக்கலாம்.

வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 011 2392607 அல்லது 011 2392608 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

0770126253 வாட்ஸ்அப் (whatsapp), வைபர் (VIber) மற்றும் இமோ (IMO) மூலம்,

Www.pucsl.gov.lk என்ற இணையதளத்தின் மூலம்,

consumers@pucsl.gov.lk மின்னஞ்சல் மூலம்,

www.facebook.com/pucsl எனும் முகநூல் (Facebook) மூலமாக

மின்சார கைத்தொழில் மற்றும் மசகு எண்ணெய் சந்தை ஒழுங்குறுத்துகையுடன் தொடர்புடைய பங்குதாரர்கள் தங்கள் சேவைகளுக்கு, 077 0126250 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழவின் சேவையை பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு அதிகாரியை சந்திப்பதற்கான அவசியம் காணப்படும் பட்சத்தில் அதற்கான தினத்தையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதற்கும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

011 2392607 மற்றும் 011 2392608 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். இன்றேல் info@pucsl.gov.lk அல்லது www.facebook.com/pucsl என்ற முகநூல் பக்கத்தினூடாக தொடர்புகொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.

உங்களது வேண்டுகோளுக்கு இணங்க பணியாற்றும் பிரிவினர் உங்களை சந்திப்பிப்பதற்கான நேரம் குறித்து விரைவில் அறியத்தருவர். இன்றேல் இணைய சேவை ஊடாக தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் 077 2943193 அவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment