தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, June 21, 2020

தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

19வது அரசியலமைப்பை திருத்துவதற்கு இந்த தேர்தலை உச்சளவில் வெற்றிகொள்ள வேண்டும். மூன்றில் இரண்டை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு மக்களிடமே உள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

எம் மீது உள்ள தனிப்பட்ட பழி வாங்கலுக்காக 19வது அரசியல மைப்பை கொண்டுவந்தனர். 19 வது அரசியலமைப்பு இப்போது கேலிக்கூத்தாகிவிட்டது. மேற்படி அரசியலமைப்பை தயாரித்து முன்வைத்தவர்களே அந்த அரசியலமைப்பை மாற்றவேண்டும் என கூறி வருகின்றனர்.

மூன்றில் இரண்டை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு மக்களிடமே உள்ளது. ஜனாதிபதி மேற்கொண்டுவரும் வேலைத் திட்டங்களை பலம் மிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்கு பலமான பாராளுமன்றம் அவசியமெனவும் பிரதமர் கூறினார். 

பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, எதிர்கால தலைமுறையினருக்காக நாட்டின் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நாம் தோல்வியடைந்தோம்.

அவ்வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட அனுமதி கிடைக்கப்பெற்றது. நான் நாட்டுக்கு செய்த சேவையின் காரணமாக மக்கள் என்னை ஆதரித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நாட்டின் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும். கடந்த அரசாங்கம் அபிவிருத்தி பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை .

எமது அரசாங்கம் செய்த அபிவிருத்தி பணிகளை கடந்த அரசாங்கம் மலினப்படுத்தியது. அரசியல் தேவைகளின் காரணமாக பல அபிவிருத்தி திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டன. இதன் பாதிப்பினை சாதாரண மக்களே எதிர்கொண்டார்கள்.

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்ப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிர்மாணித்த அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்துறைமுகத்தின் பயனை நாம் பெற முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்தை விற்பதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன . எமது எதிர்ப்பினால் அது தடைப்பட்டது. தேசிய வளங்களை பாதுகாப்பது எமது பிரதான நோக்கமாகும்.

ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பட்ட விதத்தில் செயற்பட முடியாது. நாட்டை நிர்வகிக்கும் இரண்டு தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள் நல்லாட்சியில் ஏற்பட்டன. இவர்களின் முரண்பாடுகளினால் தேசிய அடிப்படையிலும், நாடு என்ற ரீதியிலும் பலவீனமடைந்துள்ளோம். இதனை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் ஊடாக திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment