சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் - சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் வாமதேவன் - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் - சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் வாமதேவன்

(எம்.நியுட்டன்) 

தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளும் பூட்டப்பட்டு இருப்பதன் காரணமாக தென்மராட்சிப் பகுதியில் அதாவது மட்டுவில் கெடுடாவில் மறவன்புலவு சரசாலை போன்ற கிராமங்களில் சட்டத்துக்கு முரணான முறையில் மறைவானபற்றைகளுக்குள்ளும் ஆட்கள் இல்லாத வீடுகளிலும் கசிப்பு உற்பத்தி பெருமளவில் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனினும் இது தொடர்பில் நாம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிசாரினாலும் பெருமளவு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்படுகின்றார்கள். 

இருந்தபோதும் அது இன்றுவரை முற்றாக நிறுத்தப்படவில்லை எனவே இந்த கசிப்பு உற்பத்தியினை நிறுத்துவதற்கு தென்மராட்சி இளைஞர்கள் பொலிசாருடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த கசிப்பு உற்பத்தியினைதென்மராட்சியில் முற்றாக ஒழிக்க முடியும். 

மேலும் நேற்று முன்தினம் பிரதேச சபையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது கசிப்பு உற்பத்தி நிறுத்தக்கோரி ஒரு பிரதேச சபை உறுப்பினரால் விசேடபிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்பட்டிருந்தது. அன்றிரவு அவரது வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களினால் அவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளமைக்கும் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment