பதில் பொலிஸ்மா அதிபரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் கவலைக்குரியன - ஜே.வி.பி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

பதில் பொலிஸ்மா அதிபரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் கவலைக்குரியன - ஜே.வி.பி

(எம்.மனோசித்ரா) 

பதில் பொலிஸ்மா அதிபர் பக்கச்சார்பாக செயற்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், அண்மைக் காலமாக மக்கள் விடுதலை முன்னணியைப் பற்றி சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளும் முறையற்ற விமர்சனங்களும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எம்மால் முன்னெடுக்கப்படும் சேவைகள் மற்றும் மக்கள் நலன் செயற்த்திட்டங்கள் என்பவற்றை சீர்குழைக்கும் வகையிலேயே இந்த விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நளிந்த ஜயதிஸ்ஸ என்பவரோடு நானும் சீ.ஐ.டியில் முறைப்பாடளித்துள்ளோம். 

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி எம்மால் முறைப்பாடளிக்கப்பட்டது. ஆனால் ஒன்றரை மாதங்கள் கடந்தும் இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment