இலங்கையிலிருந்து மேலும் 40 பாகிஸ்தானியர் நாடு திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 4, 2020

இலங்கையிலிருந்து மேலும் 40 பாகிஸ்தானியர் நாடு திரும்பினர்

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த மேலும் 40 பாகிஸ்தான் பிரஜைகள் இன்று (04) காலை கொழும்பிலிருந்து பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1185 எனும் விமானத்தின் மூலம் இவர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற பாகிஸ்தானியர்களை காண்பதற்காக, உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பில் இரண்டாவது செயலாளர் (அரசியல்) ஆயிஷா அபூபக்கர் ஃபஹாட் வருகை தந்திருந்தார்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயமானது, இலங்கை அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், இலங்கையில் சிக்கியிருந்த 50 பாகிஸ்தானியர்களை கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல வழி வகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையில் தங்கியிருந்தபோது, சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்கிய பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் முயற்சிகளை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment