(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, எனவே கல்வியைப் பெற்றுக் கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்து முன்னாள் சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.
"பாடசாலைக் கல்வி வெறுமனே அறிவை மாத்திரமன்றி பொறுப்புள்ள, படைப்பாற்றல் மிக்க பிரஜையை உருவாக்குவதற்கும் போதிக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகிறது. எனவே கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்".
No comments:
Post a Comment