போர்க்கப்பலில் உள்ள கடற்படையினரை உடனடியாக வெளியேற்றுங்கள்- அமெரிக்க கப்பலின் கப்டன் மன்றாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

போர்க்கப்பலில் உள்ள கடற்படையினரை உடனடியாக வெளியேற்றுங்கள்- அமெரிக்க கப்பலின் கப்டன் மன்றாட்டம்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்த கப்பலில் சிக்குண்டுள்ள கடற்படையினரை காப்பாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கப்பலின் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்டின் தளபதியான பிரெட் கிரெஜைர் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார். 

நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை, மாலுமிகள் மரணிக்க வேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டுள்ள கப்டன் எங்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய சொத்துக்களாக மாலுமிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறுகின்றோம் என தெரிவித்துள்ளார். போர்க்கப்பலில் வைரஸ் தொடர்ந்து பரவுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீர்க்கமான நடவடிக்கை அவசியம் என தெரிவித்துள்ள கப்பலின் தளபதி அமெரிக்காவின் அணு ஆயுத விமானந்தாங்கி கப்பலில் இருந்து கடற்படையினரை அகற்றி இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாக தோன்றலாம் என குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் இது எடுக்கப்பட வேண்டிய அவசியமான ஆபத்தான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் மாலுமிகளின் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன் கப்பல் கூடிய விரைவில் மீண்டும் இயங்குவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

4000 இளம் ஆண்களையும் பெண்களையும் கப்பலில் வைத்திருப்பது அனாவசியமான ஆபத்தை உருவாக்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள போர்க்கப்பலின் தளபதி கடற்படையினரின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment