சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தியவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 15, 2020

சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தியவர் கைது

பாறுக் ஷிஹான்

சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில்-நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள கழியோடை பாலத்தில் சம்மாந்துறை பொலிசாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச் சாவடியில் புதன்கிழமை (14) அதிகாலை இச்சந்தேக நபர் கைதானார்.

வீதிச் சோதனைச் சாவடியில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தொழிலிலிருந்து நீக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், இரு வருடங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பெறப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், குறித்த சந்தேக நபர் சமூர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அட்டாளைச்சேனை பகுதியிலிருந்து நிந்தவூர்ப் பகுதிக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment