இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் 5.00 மணியளவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட மூவரில் ஒருவரான மருதானையைச் சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்
72 வயதான குறித்த நபர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்திருந்தார். இவர் அதேதினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானது. 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.
இரண்டாவது மரணம் 30ஆம் திகதி மொஹமட் ஜமால் எனும் நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார்.
இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.
இதேவேளை கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.
அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் மூவரும் என இலங்கையர் 06 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment