24 மணி நேரத்தில் பொலிஸ் ஊரடங்கை மீறிய 1,015 பேர் கைது - 254 வாகனங்கள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

24 மணி நேரத்தில் பொலிஸ் ஊரடங்கை மீறிய 1,015 பேர் கைது - 254 வாகனங்கள் கைப்பற்றல்

நேற்று (01) காலை 6.00 மணி முதல் இன்று (02) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு இக்காலப்பகுதியில் 254 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியினுள்ள 9,466 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2,332 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment