காத்தான்குடியின் புதிய பிரதேசக் கல்விப் பணிப்பாளர் கலாவுதீன் கடமைகளை பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 3, 2020

காத்தான்குடியின் புதிய பிரதேசக் கல்விப் பணிப்பாளர் கலாவுதீன் கடமைகளை பொறுப்பேற்றார்

(ஆதிப் அஹமட்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் பிரதேசக் கல்விப் பணிப்பாளராக புதிதாத நியமிக்கப்பட்ட M.M.கலாவுதீன் (SLPS) அவர்கள் தன்னுடைய கடமைகளை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் DR.SMMS.உமர் மௌலானா அவர்களின் முன்னிலையில் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.றிப்கா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் C.M.ஆதம்லெப்பை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நீண்ட கால கல்விச் சேவை அனுபவம் கொண்ட M.M.கலாவுதீன் (SLPS) அவர்கள் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலே வெற்றிடமாக காணப்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்கான பிரதேசக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment