பட்டதாரிகள் நியமனம் தொடர்பில், தான் எடுத்த முடிவில் எந்தவிதமான மாற்றமும் கிடையாதென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ேமலும் கூறியதாவது, அரச வேலை வாய்ப்புக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகளை தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பதற்கு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது.
தேர்தல் விதிகளுக்கமையவே தாம் செயற்பட்டிருப்பதாகவும், நியமனங்ளையோ, பயிற்சிகளையோ தாம் தடை செய்யவில்லை தேர்தல் முடிவும் வரை ஒத்திவைக்குமாறு மட்டுமே கோரினோம் எனவும் அவர் தெரவித்தார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment