மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய்த் தடுப்புச் செயற்திட்டத்தின் கீழ், வெளி மாட்டங்களில் இருந்து மட்டு. மாவட்டத்துக்குள் வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) மேற்கொண்டனர்.
இதற்கமைய கொழும்பில் இருந்து ஒருவர் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய அவ்ர தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சியின ஆலோசனைக்கு அமைய சம்பவதினமான நேற்று குறித்த நபரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், அவரை வீட்டை விட்டு 14 நாட்களுக்கு வெளியேற வேண்டாம் எனத் தெரிவித்து வீட்டுச் சுவரில் கொரோனா தனிமைப்படுத்தல் எச்சரிக்கை அறிவிப்பு கடித்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து வருபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment