அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்தார் பிரதமர் மோடி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்தார் பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் சர்வதேச ரீதியில் வேகமாக பரவிவரும் நிலையில் இந்திய அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குகு பயணம் மேற்கொள்வதற்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். 

இந்திய பிரதமர் இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

அச்சத்திற்கு இடமளிக்காதீர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடமளியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மத்திய அமைச்சர்கள் எவரும் எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கு செல்லமாட்டார்கள் என தெரிவித்துள்ள மோடி இந்தியர்களையும் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தி கேட்பதாக தெரிவித்துள்ளார். 

பெருமளவுவில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை எங்களால் முறியடிக்க முடியும் என நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment