நாளை விடுமுறை தினமாக இருந்தாலும், அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் - விடுமுறையை நீடிக்க வேண்டிய தேவை எற்பட்டால் நீடிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

நாளை விடுமுறை தினமாக இருந்தாலும், அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் - விடுமுறையை நீடிக்க வேண்டிய தேவை எற்பட்டால் நீடிக்கப்படும்

நாளை விடுமுறை தினமாக இருந்த போதிலும் அத்தியாவசிய சேவைகளான மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் அரச அலுவலகங்களுக்கு வருமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடி தேவையாயின் மாத்திரம் வர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக நாளை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும் நீடிக்க வேண்டிய தேவை எற்பட்டால் மாத்திரமே நீடிக்கப்படும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சில் ஊடகங்கள் மத்தியில் இன்று காலை கருத்து தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு விசேட சுற்றறிக்கை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள், பயிற்சி கூட்டங்கள் முதலானவற்றை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்க அலுவலகங்களில் அத்தியாவசிய பணியாளர் சபை அதிகாரிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரம் அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவுமாயின் மாத்திரம் அரச அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment