உலக நாடுகளில் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பாகிஸ்தானில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 150 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டிலுக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 193 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மஸ்கட் நாட்டில் இருந்து கடந்த 15 ஆம் திகதி பாகிஸ்தான் வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முதல் நபர் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment