சாரதி அனுதிப்பத்திரம் விநியோகம், பரீட்சைகள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

சாரதி அனுதிப்பத்திரம் விநியோகம், பரீட்சைகள் இடைநிறுத்தம்

சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, வேரஹெர போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் அல்லது ஏனைய போக்குவரத்து திணைக்கள மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தருவது எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை மார்ச் 17ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை, சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள் செயல்படாது எனவும், ஏற்கனவே தினம் ஒதுக்கப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல பரீட்சைகள் மற்றும் பிரயோக பரீட்சைகளும் இரத்து செய்யப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கால எல்லைக்குள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தல், உள்ளிட்ட தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானங்களை விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment