மியான்மாரிலும் பரவியது கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

மியான்மாரிலும் பரவியது கொரோனா

மியான்மார் நாட்டில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடான மியான்மாரிலும் இரண்டு நபர்களுக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்ட 26 மற்றும் 36 வயது நிரம்பிய இரண்டு நபர்களும் சமீபத்தில்தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மியான்மர் திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மியான்மாரில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதியானபோதிலும் மேலும் ஒரு முறை இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை மறு பரிசோதனைக்காக தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment