சர்வ கட்சி மாநாடொன்றை விரைந்து கூட்டுங்கள் - ஜனாதிபதியிடம் சஜித் வேண்டுகோள்! - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

சர்வ கட்சி மாநாடொன்றை விரைந்து கூட்டுங்கள் - ஜனாதிபதியிடம் சஜித் வேண்டுகோள்!

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதை உறுதி செய்வதற்காக சர்வ கட்சி மாநாடொன்றைக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

இது குறித்து சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது முழு உலகுமே தற்போது நெருக்கடி நிலையொன்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையும் அவதானத்திற்குரிய நாடாக மாறியிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை குழப்ப நிலைக்கு உட்பட்டிருக்கிறது. 

நாட்டில் சுகாதாரப் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு, ஊடகம் உள்ளிட்டோர் தற்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அதேவேளை, அவர்களது பணிக்கான கௌரவத்தையும் வெளிப்படுத்துகிறேன். 

அதேவேளை இச்சவாலுக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீள்வது எம்மனைவருக்கும் உரிய பொதுவான சமூகப் பொறுப்பாகும். 

இந்நிலையில் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்காக சர்வ கட்சி மாநாடொன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.

No comments:

Post a Comment