5 பஸ்களில் புணானை முகாமில் இருந்து பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

5 பஸ்களில் புணானை முகாமில் இருந்து பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரோனா தடுப்பு முகாங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த் தொற்றும் இல்லாத நிலை தங்களின் குடுப்பங்களுடன் இணைக்கும் பணி இன்று (24.03.2020) இடம் பெற்றது.

இரானுவத்தினரின் பஸ் மூலமாக புனானை முகாமில் இருந்து மத்தறை பகுதிக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 80 பேரும் கொழும்புக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 125 பேரும் கண்டிக்கு ஒரு பஸ் மூலமாக 33 பேரும் மொத்தமாக 238 பேர் இன்று காலை 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் இரானுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேர்கள் இரானுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment