ஊரடங்கை மீறிய குற்றசாட்டில் 4,217 பேர் கைது - 1063 வாகனங்கள் பறிமுதல் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

ஊரடங்கை மீறிய குற்றசாட்டில் 4,217 பேர் கைது - 1063 வாகனங்கள் பறிமுதல்

இன்று காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்தோடு 30 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் 4,217 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1063 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment