தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இன்று (10) அதிகாலை நாட்டிற்கு விமானம் மூலம் வருகை தந்த மேலும் 24 பேர் பொலன்னறுவை, கந்தக்காடு இராணுவ முகாமில் உருவாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்துள்ள அனைவரும் ஆண்கள் என்பதோடு, அவர்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment