வவுனியா கொரோனா கண்காணிப்பு தடுப்பு முகாமுக்கு 213 பேர் வருகை - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

வவுனியா கொரோனா கண்காணிப்பு தடுப்பு முகாமுக்கு 213 பேர் வருகை

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு நேற்று மாலை 7 மணியளவில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பஸ்களில் 265 பேர் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் விமான பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். 

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கே தற்போது அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இச்செயற்பாட்டுக்கு முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment