மார்ச் 17 முதல் 20 வரை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் மீள திகதியிடப்படும் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

மார்ச் 17 முதல் 20 வரை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் மீள திகதியிடப்படும்

மார்ச் 17 முதல் 20 வரை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் மீள திகதியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழு செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய வழக்கு திகதி ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழக்கறிஞர்களின் அல்லது குறிப்பிட்ட தரப்பினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய, முக்கிய வழக்குகள் மாத்திரம் எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எஸ். சோமரத்னவினர் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கை வருமாறு.

No comments:

Post a Comment