இலங்கையில் மேலும் இருவர் குணமடைவு, 16 பேர் வீடு திரும்பினர் - 104 பேர் கண்காணிப்பில், 104 பேர் சிகிச்சையில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

இலங்கையில் மேலும் இருவர் குணமடைவு, 16 பேர் வீடு திரும்பினர் - 104 பேர் கண்காணிப்பில், 104 பேர் சிகிச்சையில்

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று (31) முற்பகல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட 16 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக, இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு மற்றும் இலங்கை சுகாதார மேம்பாட்டு திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.

அதற்கமைய சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 122 பேரில் தற்போது 104 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 104 பேர் கண்காணிப்பில் உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளம் - 122
குணமடைவு - 16
கண்காணிப்பில் - 104
சிகிச்சையில - 104
மரணம் - 02

மரணமடைந்தவர்கள் (05)
இலங்கையில் - 02
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 16
மார்ச் 31 - 02 பேர் (16)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 122
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

No comments:

Post a Comment