ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 30ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவதென எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொதுத் தேர்தல் வேட்பாளர் தெரிவு செய்யும் சபையின் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவை நியமிப்பது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment