கொரோனா வைரஸின் தாக்கம் ; 17,387 பேர் பாதிப்பு, 362 பேர் உயிரிழப்பு! - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

கொரோனா வைரஸின் தாக்கம் ; 17,387 பேர் பாதிப்பு, 362 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 17,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 362 ஆக உயர்வடைந்துள்ளது. 

01. சீனா : பாதிப்பு - 17,206 உயிரிழப்பு - 361 
02. ஜப்பான் : பாதிப்பு - 20 
03. தாய்லாந்து : பாதிப்பு - 19 
04. சிங்கப்பூர் : பாதிப்பு - 18 
05. தென்கொரியா : பாதிப்பு - 15 
06. ஹொங்கொங் : பாதிப்பு - 14 
07. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 12 
08. தாய்வான் : பாதிப்பு - 10 
09. ஜேர்மனி : பாதிப்பு - 10 
10. அமெரிக்கா : பாதிப்பு - 09 
11. மலேசியா : பாதிப்பு - 08 
12. மாக்கோ : பாதிப்பு - 08 
13. வியட்நாம் : பாதிப்பு - 07 
14. பிரான்ஸ் : பாதிப்பு - 06 
15. டுபாய் : பாதிப்பு - 05 
16. கனடா : பாதிப்பு - 04 
17. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு -2, இறப்பு - 01 
18. இந்தியா : பாதிப்பு - 02 
19. ரஷ்யா : பாதிப்பு - 02 
20. பிரிட்டன் : பாதிப்பு - 02 
21. இத்தாலி : பாதிப்பு - 02 
22. இலங்கை : பாதிப்பு - 01 
23. பின்லாந்து : பாதிப்பு - 01 
24. கம்போடியா : பாதிப்பு - 01 
25. சுவீடன் : பாதிப்பு - 01 
26. நேபாள் : பாதிப்பு - 01 
27. ஸ்பெய்ன் : பாதிப்பு - 01 

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது 27 நாடுகளில் பரவி 17,387 போரை பாதிப்படையச் செய்துள்ளதுடன், 362 பேரின் உயிரிழப்புக்கும் பிரதான காரணமாக அமைந்துள்ளது. 

பெப்ரவரி 02 ஆம் திகதி கலிபோர்னியா அமெரக்காவில் 09 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்தது. 

பெப்ரவரி 02 ஆம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிலிப்பைன்ஸில் உயிரிழந்தார். இதுவே சீனாவுக்கு வெளியே நிகழ்ந்த முதல் உயிரிழப்பாக பதிவாகியது. வுஹானைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றுடன் ஜனவரி 25 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதன் பின்னர் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களில் அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்தது. எனினும் அவர் உயிரிழக்கும் முன்னர் 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து சென்றது. இதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் சுகாதார துறை தெரிவித்தது. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டும் வுஹான் கொரோனா வைரஸின் பரவலுக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தற்காலிக பயண தடைகளை விதித்துள்ளன. 

அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து நாடுகள் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்காக சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment