பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் குடும்பிச் சண்டை - அமைச்சர் விமலவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் குடும்பிச் சண்டை - அமைச்சர் விமலவீர

பாறுக் ஷிஹான்

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் குடும்பிச் சண்டை தொடங்கிவிட்டது. ஆனால் பொதுத் தேர்தலை வெற்றி பெறுவதாக அவர்கள் தெரிவிப்பது கேலிக்கையானது என ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் மாவடிப் பள்ளியில் சனிக்கிழமை (1) மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேர்தல் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவ போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் தலைவர் தான் முழு அதிகாரம் படைத்தவர். ஆனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பெயருக்கு ஜனநாயகம் மட்டுமே உள்ளது. இந்த கட்சியில் தான்தோன்றித்தனமாக தலைவர் மாத்திரமே முடிவுகளை எடுக்கின்றார். இதனால் எமக்கு தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவாக இருக்கும் என கூறினார்.

No comments:

Post a Comment