கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான வுஹானில் இருந்து 324 பயணிகளுடன் ஏயார் இந்திய விமானம் டெல்லியில் தரையிரங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்தோடு சீனாவின் ஹுபே நகரில் வசிக்கும் 600 இந்தியர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்களை மீட்பதற்கு திட்டமிட்ட நிலையிலேயே இன்று ஏயார் இந்தியா போயிங்க 747 (Air India Boeing 747) என்ற விமானம் 324 பயணிகளுடன் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அத்தோடு விரைவாக இதற்கான நடவடிக்கைளை மேற்கொண்ட சீன அரசிற்கு இந்திய அரசு நன்றியையும் தெரிவித்துள்ளது. அதேவேளை இரண்டாவது விமானமும் இன்று பயணிகளுடன் வுஹானில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 259 ஆக உயர்யர்ந்துள்ளதுடன் இதுவரை 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையிலேயே இந்திய பிரஜைகளை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment