சம்மாந்துறை மாஹிரின் வெளியேற்றம் முஸ்லிம் காங்கிரசின் வாக்குகளில் பாதிப்பினை ஏற்படுத்துமா ? - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

சம்மாந்துறை மாஹிரின் வெளியேற்றம் முஸ்லிம் காங்கிரசின் வாக்குகளில் பாதிப்பினை ஏற்படுத்துமா ?

“அண்ணன் எப்போது மண்டைய போடுவான், தின்னை எப்போது காலியாகும்” என்பதுதான் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையே உள்ள வெட்டுக்குத்துக்களாகும்.

மக்கள் செல்வாக்குள்ள பிரமுகர்களின் வெளியேற்றம் மு.காங்கிரசை பாதிக்கும் என்ற நிலையை அறிந்திருந்தும் அவ்வாறான வெளியேற்றத்தினை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளிலும் எவரும் ஈடுபடுவதில்லை.

“இருப்பதென்றால் இரு. போறதென்றால் போ” என்ற அலட்சியப் போக்கு முஸ்லிம் காங்கிரசில் அதிகமாக காணப்படுவது கடந்தகால வரலாறாகும்.

கட்சிக்காக எவ்வளவுதான் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தாலும் இறுதியில் எல்லாம் பூச்சியமே.

இருக்கும் வரைக்கும் தியாகிகள் என்று தலையில் வைத்துக்கொண்டு ஆராத்தி எடுப்பதும், பின்பு கட்சியை விட்டு வெளியேறினால் அவர்களை துரோகிகள் என்று தூற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.

ஆனால் ஏன் கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்றும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ன ? அநீதிகள் என்ன ? அவ்வாறான வெளியேற்றத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் நாங்கள் சிந்திப்பதில்லை.

அண்மையில் மு.கா இன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சம்மாந்துறையை சேர்ந்த மாஹிர் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மு.கா தனிநபர்களில் தங்கியிருக்கும் கட்சியல்ல என்று கூறப்பட்டாலும், சம்மாந்துறை மக்களின் நிலைப்பாடு வித்தியாசமானது. அங்கு பிரமுகர்களினால்தான் கட்சியின் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

மு.காங்கிரசின் கோட்டையாக இருந்த சம்மாந்துறையானது 2003 இல் அன்வர் இஸ்மாயில் வெளியேறியதில் இருந்து மாஹிர் அவர்கள் மு.காங்கிரசில் இணையும் வரைக்குமான இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மு.கா தொடர்ந்து பாரிய தோல்வியை எதிர்கொண்டது.

நௌசாத், தம்பிக்கண்டு ஆகியோரின் உழைப்பின் மூலம் எதிர்கொண்ட 2006 பிரதேசசபை தேர்தலை இதனுடன் ஒப்பிட முடியாது.

2004 பொதுத்தேர்தலில் தலைவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தும் சம்மாந்துறை தொகுதியை வெற்றிகொள்ள முடியவில்லை.

மாஹிர் அவர்களின் வருகைக்கு பின்புதான் 2012 இல் மாகாணசபை தேர்தலிலும், 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலிலும் சம்மாந்துறையை முஸ்லிம் காங்கிரசினால் வெற்றிகொள்ள முடிந்தது.

அவ்வாறு இக்கட்டான காலங்களில் கட்சியை தூக்கி நிறுத்தி வெற்றிக்கு உதவியவரின் அர்ப்பணிப்பை கண்டுகொள்ளாமல், நன்றி அற்றவர்களாக சாதாரணமாக நோக்குவது எதிர்காலத்தில் சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் என்பது கட்சியில் அபிமானம் உள்ளவர்களின் கவலையாகும்.

ஆனால் கட்சியைவைத்து அனுபவிப்பவர்களுக்கு இவ்வாறானவர்களின் வெளியேற்றம் எந்தவித கவலையையும் ஏற்படுத்தாது. மாறாக மகிழ்ச்சியையே ஏற்படுத்தும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment