தலைமன்னார் பியர் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு விரைவாக காணிப் உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் காரதர் மஸ்தான் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நீண்ட காலமாக தாம் குடியிருக்கும் தலைமன்னார் பியர் மீள்குடியேற்ற கிராமம் மற்றும் அம்பாள்புரம் ஆகிய காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், மாகாண பணிப்பாளர் மற்றும் மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதேச செயலாளர் உறுப்பினர்களோடு மேற்படி பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டார்.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி பகுதியில் குடியேறி வாழ்ந்து வரும் சுமார் 880 குடும்பங்கள் தாம் குடியிருக்கும் காணிகளை தமக்கு சொந்தமாக்கி உறுதி வழங்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இது தொடர்பில் பல்வேறு முயற்சிகளை கடந்த காலங்களில் செய்து வந்திருந்த நிலையில் நேற்று மேற்படி அதிகாரிகள் குழுவுடன் அப்பகுதிக்கு விஜயமளித்து கள நிலவரங்களை நேரடியாக பார்வையிட்டார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் விரைவாக இங்கே குடியிருக்கும் சுமார் 880 குடும்பங்களுக்கும் காணிப் பத்திரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் விரைவாக காணி உறுதிகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
No comments:
Post a Comment