அலுவலக உதவியாளர்கள், சாரதிகளை நிரந்தரமாக்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு முடிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

அலுவலக உதவியாளர்கள், சாரதிகளை நிரந்தரமாக்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு முடிவு

அரச நிறுவனங்களில் அமைய, ஒப்பந்த, தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான தரவுகளை அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைமை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கோரி இன்று சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த சேவைகளுக்கான பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு அமைய, நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகள், 180 நாட்கள் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டவர்களாகவும் உரிய கல்வித் தகைமைகளை கொண்டவர்களாவும் இருக்க வேண்டும்.

தேவையான தகமைகளை பூர்த்திசெய்தவர்களுக்கு அலுவலக தலைமை அதிகாரிகளால் தற்காலிக நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.

தற்காலிக நியமனக் கடிதங்களைப் பெற்று 3 மாதங்களுக்குள் நிரந்தர நியமனங்களுக்கான கடிதங்களை ஒன்றிணைந்த சேவைகளுக்கான பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment