சிறைச்சாலையையும் விட்டு வைக்காத கொரோனா - 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

சிறைச்சாலையையும் விட்டு வைக்காத கொரோனா - 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம்

சீனாவில் உள்ள சிறைச்சாலைகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா வைரஸ் வேக­மாக பரவி வருகின்றது. 

அந்த வ­கையில், கொரோனா வைரஸின் பிறப்பிடமான ஹுபெய் மாகாணத்தி­லுள்ள சிறைச்சாலைகளில் 271 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 200 கைதிகள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

இதேவேளை, ஜெஜியாங் மாகா­ணத்தின் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்­பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஹுபெய் மாகாணத்தி­லுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளங்குற்ற­வாளி ஒருவருக்கும் வைரஸ் அறி­குறி இருப்பது கண்டறியப்பட்டுள்­ளது. 

இவ்வாறு வைரஸ் பாதிப்புக்குள்­ளான கைதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்­காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலைகளில் கொரோனா வேகமாக பரவியதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பில் கவனக்குறைவாக இருந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment