எதிர்ப்புக்கள், புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஐன் இராமநாதன் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக் கூட்டத்திற்கு இங்குள்ள மக்களின் பிரதிநிதிகள் சமூகமளிக்கவில்லை.
அவ்வாறு சமூகமளிக்காது எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது அல்லது கூட்டத்தைப் புறக்கணிப்பதென்பது மக்களுக்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகவே அமைகிறது.
ஆகையால் இவ்வாறான எதிர்ப்புக்கள் அல்லது புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது.
மக்களுடைய பிரச்சினைகள் தேவைகள் தொடர்பாக கலந்து பேசி ஒரு தீர்மானம் எடுத்தே செயற்பட வேண்டும். அவ்வாறு பேசுவதனூடாகதான் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவும் முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment