சீன பிரஜைகளை தொழில் செய்யும் இடங்கள் மற்றும் தங்கியுள்ள விடுதிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

சீன பிரஜைகளை தொழில் செய்யும் இடங்கள் மற்றும் தங்கியுள்ள விடுதிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவித்தல்

வதிவிட விசா விநியோகிக்கப்பட்டுள்ள பணியிடங்களிலுள்ள சீன பிரஜைகளுக்கு ஆலோசனைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்புவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் தங்கியுள்ள சீன பிரஜைகள் மற்றும் அண்மையில் சீனாவிற்கு சென்று திரும்பிய ஊழியர்களை அவர்கள் தொழில் செய்யும் இடங்கள் மற்றும் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அனைத்து ஆலோசனைகளையும் நாளைய தினம் சீன நிறுவனங்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment