முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த

ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், எதிர்வரக்கூடிய தேர்தல்களின் போது எதிர்நோக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க முடியும் ன தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கலாய்ப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சில கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. 

அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது நிருவாக அமைச்சுக்கும் அரச சேவை ஆணைக்குழுவுக்கும் பாரப்படுத்தப்பட்ட போதிலும் அது குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அத்துடன் சில அரச ஊடகங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி பக்கச் சார்பாக செயற்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகளை பொலிஸாருக்கும், அரசை சேவை ஆணைக்குழுவுக்கும் பாரப்படுத்திய போதிலும் அது குறித்தும் இதுவரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

முக்கியமாக சில இலத்திரனியல் ஊடகங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களைக் கூட கருத்தில் கொள்ளத் தவறியிருந்தன என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment