ராஜித சேனாரட்ன மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

ராஜித சேனாரட்ன மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றார்

நாட்டு மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கருதியே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன செயற்பாடுகளை முன்னெடுக்கின்றாரென இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் கெஹலிய மேலும் கூறியுள்ளதாவது, “சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாக்கும் எந்தவொரு நிறுவனங்களுக்கும் தற்போதையை அரசாங்கத்தினால் அச்சுறுத்தல்களோ அழுத்தங்களோ பிரயோகிக்கப்படுவதில்லை.

அந்த வகையில் அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் நீதித்துறை சுயாதீனமாகதான் இயங்குகின்றது என்பதில் மாறுபட்டக் கருத்துக்கும் இடமில்லை.

இதேவேளை குற்றங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்கின்றபோது அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்குள் ஓடி, ஒளியும் கலாசாரம் மாற வேண்டும்.

மேலும் ராஜித சேனாரட்ன மக்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயற்படுகின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment