யாழ். மாவட்டத்தில் நீண்டகாலமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த மற்றும் காணி அற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் கீழ் யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த மற்றும் காணி அற்றவர்கள் என பதிவு செய்யப்பட்ட 535 குடும்பங்களில் 250 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளது
அதற்கமைய நன்கொடையாளர்களினால் கொள்வனவு செய்யப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 7.5 ஏக்கர் அளவிலான காணியைக் கொண்ட யாழ். பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இல.88 கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதிய சோனக வீதி வண்ணார்பண்ணையில் அமைந்துள்ள இராசாளிகுளங்கரை எனும் தனியார் காணியில் இருமாடி இரட்டை வீடமைப்பு கட்டடத் தொகுதியொன்றில் (Twin) வீடொன்று தலா 600 அடி சுற்றளவைக் கொண்ட வகையில் 250 வீடுகளைக் கொண்ட கட்டுமானம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment