கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக எஸ்.நவநீதன் நியமிக்கப்பட்டிருப்பதாக மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்தார்.
இவர் இலங்கை நிருவாக சேவையில் சுமார் பதினைந்து வருட கால அனுபவம் மிக்கவர். மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக பதவி வகித்தபோது சிறப்பாக சேவையாற்றியவர்.
கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற பல்லின மக்களின் மத்தியில் கலாசார நடவடிக்கைகள் அவரது பணியால் சிறப்புறும் என கிழக்குவாழ் புத்திஜீவிகள் எதிர்பார்க்கின்றனர்.
புளியந்தீவு, துறைநீலாவனை நிருபர்கள்
No comments:
Post a Comment