தலவாக்கலை நகரில் கழிவு தேயிலை தூள் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் நேற்றிரவு (04) தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக பயன்படுத்தக்கூடிய தேயிலை தூளுடன் கழிவு தேயிலை தூளை கலந்து இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக, அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து 200 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கழிவு தேயிலை தூளுடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், தலவாக்கலை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(ஹற்றன் நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்)
No comments:
Post a Comment