வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் திலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனோர் சந்தியில் வென்னப்புவ போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருவரும் நேற்று மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது இருவரையும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment