எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை ஒக்டோபரில் நடத்த எதிர்பார்ப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை ஒக்டோபரில் நடத்த எதிர்பார்ப்பு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தலை உடனடியான நடத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்து. 

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியால் எல்பிட்டிய பிர​​தேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு, நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட மனு தொடர்பிலான தீர்ப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அத்துடன் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

உயர் நீதிமன்ற நீதியசர்களான பிரசன்ன ஜயவர்தன, விஜத் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோரினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 

அந்த உத்தரவின் அடிப்படையில் அப்பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment