எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை நாம் ஒருபோதும் மாற்ற மாட்டோமென பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் ஆதரவு வழங்கும்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகவே இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் அறிவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணையாது. இருப்பினும் தேர்தலின்போது இரு கட்சிகளையும் அடையாளம் கண்டு, ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைவதற்கான ஒப்பந்தமொன்றினை செய்யவுள்ளோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறித்து பெரும்பாலான மக்களுக்கு பாரிய நம்பிக்கை காணப்படுகிறது. இதனை இன்னும் பலப்படுத்தி, கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் சகல தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரை மாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை அறிவித்துள்ளமை கண்துடைப்பென்றும் பொதுஜன பெரமுனவின் உண்மையான ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவே என்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment