கம்பெரலிய பணத்தை நரித்தனமாக பின்கதவால் சென்று பெற்றுக்கொண்ட ஊழல் அரசியல்வாதி யார்? வியாழேந்திரன் MP காரசாரமான கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

கம்பெரலிய பணத்தை நரித்தனமாக பின்கதவால் சென்று பெற்றுக்கொண்ட ஊழல் அரசியல்வாதி யார்? வியாழேந்திரன் MP காரசாரமான கேள்வி

அடிக்கடி ஊழல் பற்றி பேசுபவன் தன் ஊழலை மறைப்பதற்காக மேற்கொள்ளும் நாடகமே! கடந்த காலங்களில் UNP அரசாங்கத்தை பாதுகாத்தமைக்கு அரசாங்கத்தால் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கம்பெரலிய நிதி வழங்கப்பட்டது. அந்த வகையில் எனக்கும் அரசாங்கத்திற்கு முன்பு வாக்களித்தமைக்கு வழங்கப்பட்ட நிதியை யோகேஸ்வரன் MP க்கு கூட தெரியாமல் பிரதமரிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டு இப்போது எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு அபிவிருத்தி யுத்தம் என்ற பெயரில் பூவும் மாலையுமாக அடுக்கு மொழி பேசி வலம் வரும் இந்த MP இவ்வாறான விடயங்களில் ஏன் கவனம் செலுத்துகின்றார் ? என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1. தனது சொந்த சகலன் மூலம் அண்மையில் வழங்கப்பட்ட திட்டங்களுக்கு கொங்குராத்துகளை 10 வீதம், 8 வீதம் என லஞ்சம் வாங்கி வேலைத் திட்டங்களை வழங்கியுள்ளார். 

2. வேலைவாய்ப்புக்கள், ஆயித்தியமலையில் அமைக்கப்பட்டு வரும் அரிசியாலைத் திட்டம் போன்ற அனைத்திலும் ஊழல். இதனை மறைக்க அடிக்கடி கூட்டங்களில் ஊழல் பற்றிப் பேசி அவ்வப்போது ஊடகங்களில் அறிக்கையும் விடுவார். 

ஆனால் நான் கடந்த காலம் முதல் இன்று வரை யாரிடமும் ஒரு சல்லி சதமும் கையூட்டும் பெற்றதில்லை. நிரூபித்தால் அடுத்தகணமே என் பதவியை இராஜினாமா செய்வேன். அரசனை நம்பி புருசனை கைவிட்ட பெண் போலவே அரசியலுக்காக செய்த தொழிலை உதறிவிட்டு வந்தவன் நான் அல்ல. 

இன்றும் உழைத்து சாப்பிடுகின்றோம். எனது வீட்டை வைத்து அரசியல் செய்யும் பீத்தர அரசியல்வாதியான இவருக்கு தகவலறியும் யுகத்தில் சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். 

அரசியலுக்கு வர முதலே 2004 முதல் சொந்தமாக மூன்று கல்லூரிகள், சொந்தமாக வாகனம், சொந்தமாக 2010 முதல் மட்டுநகரில் உப்புக் கராச்சில் வளவு இவ்வளவும் சொந்தமாக இருந்த எனக்கு ஒரு வீடு இருப்பது பெரிய விடயமில்லை.

விஞ்ஞானியான இவர் தகவலறியும் சட்டத்தின் மூலம் இதையெல்லாம் பெற முடியும். இப்போது இவரது வேலை தமிழ் மக்களுக்கு நடக்கும் பிரச்சினையைப் பார்ப்பதை விட நான் என்ன செய்கிறேன் என்பதைப் பார்ப்பதும், சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தகவல் பரிமாறுவதுமே! 

ஆனால் பென்சனுக்கு போகும் வரை மோட்டார் சைக்கிளில் திரிந்தவருக்கு இப்போது சொகுசு வாகனம் எனப்பல எனது தொழில் நிறுவனங்களில் அவர் கடந்த காலங்களில் தொழில் புரிந்தவர். அது அவருக்கு நன்றாகத் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment