எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு, செங்கலடி பகுதியிலிருந்து நான்கு நாட்களேயோன சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
மீராவோடை, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வேளை வங்கிக்கு அருகில் பெண் சிசு ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.
இதனைனயடுத்து இன்று புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் அப்பெண் குறித்த சிசுவை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.
இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது கிராம் (2,970 கிராம்) எடையுள்ளதாகவும் இக்குழந்தை நான்கு நாட்கள் மதிக்கத்தக்ககு என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுண தெரிவித்தார்.
No comments:
Post a Comment