பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பல எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும் தீர்மானங்களையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பல எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும் தீர்மானங்களையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார்

பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பல எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும் தீர்மானங்களையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கின்றார் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைப் பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனை ஒருபோதும் தீர்வாக அமையாது எனவும் அவ்ர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்படும் மரண தண்டனை நிவேற்றும் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையினை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்ததில் இருந்து மேற்குலக நாடுகள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றார்கள்.

எதிர்ப்புகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் சர்வதேச அமைப்புக்கள் உள்ளன.

மரண தண்டனையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்லமாட்டோம் என்று கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 120 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. இதில் இலங்கையும் ஒரு நாடாகும்.

போதைப் பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனை ஒருபோதும் தீர்வாக அமையாது. அரசியல்வாதிகளின் ஆதரவுடனேயே நாட்டுக்குள் போதைப் பொருள் ஊடுருவுகின்றது.

நாட்டுக்குள் போதைப் பொருள் எவ்வழியில் வருகின்றது என்பது தொடர்பாக ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை கொல்வதால், பிறர் போதைப் பொருளை பாவிக்கமாட்டார்கள் என்ற ஜனாதிபதியின் வாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment