இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிங்தானுக்கும் இடையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதே தமது நோக்கம் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் எதிர்க் கட்சித் தலைவரிடம் கூறியுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தின் போது இந்திய அரசாங்கத்தால் சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு தமது நன்றிகளை மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய அரசாங்கத்தால் குறித்த செயற்றிட்டம் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் கவலை அடைவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment