கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 02 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் 06 மாடி கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை மற்றும் கரையோரப் பிரதேச மக்கள் இவ்வைத்தியசாலை ஊடாக நன்மையடைய வேண்டும் என்பதற்காக சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசீம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன்போது இவ்வாறான பாரிய அபிவிருத்தி திட்டம் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

No comments:

Post a Comment