பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜரானார்.
மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அர்ஜூன் அலோசியஸ் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆணைக்குழு முன்னிலையில் இன்று முற்பகல் 11.40 அளவில் ஆஜரான அர்ஜூன் அலோசியஸிடம் சுமார் 3 மணித்தியாலயம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவ்வதிகாரி குறிப்பிட்டார். வாக்குமூலம் வழங்கிய பின்னர் பிற்பகல் 1.50 மணியளவில் அர்ஜூன் அலோசியஸ் அங்கிருந்து வெளியேறினார்.
No comments:
Post a Comment